எளிய முறையில் புற்று நோயை அழிக்கவும்,
முற்றிலும் வராமல் தடுக்கவும் ஒரு
சிறந்த மருந்து உள்ளது. இது
ஆச்சரியம் ஆனாலும் உண்மை, அப்படி
ஒரு மருந்தை தற்போது பிரேசில்
டாக்டர். ரோமனோ சகோ என்பவர்
கண்டுபிடித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் கொடுமையான நோய்,
புற்று நோய் தான். இந்நோய்க்கு
ஆட்பட்டவர்கள் சப்த நாடிகளும் அடங்கி
ஒடுங்கிப் போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான்
தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக்
கொண்டு இருந்த பலரையும் , அடியோடு
சாய்த்து விடும் தன்மை. இந்த
நோய்க்கு உண்டு.
இப்போது மருத்துவ துறையில் பல மருந்துகளை கண்டுபிடித்து,
குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும்,
முற்றிலும் குணப்படுத்த முடியாததாகும். அதுவும், பணம் படைத்தவர்கள் மட்டுமே
அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனாலும் அந்த வலி,
வேதனை, ரணம் உயிரை விடுவதே
மேல் என்றே தோன்றி விடும்.
இப்படிப்பட்ட கொடிய புற்று நோயை
, படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த, வராமல் காத்துக்கொள்ள ஒரு
எளிய மருந்து உண்டு என்றால்
வேண்டாமென்று யார் சொல்வார்கள். டாக்டர்.
ரோமனோ சகோ அவர்கள் மருத்துவர்
மட்டுமல்லாது கிருஸ்துவ பாதிரியாரும் கூட. இவர், தனது
ஆராய்ச்சியில் கண்டு பிடித்த இம்மருந்தை
பலர் உபயோகித்து குணம் அடைந்துள்ளனர். அதிலும்,
புற்று நோயால் மிக கடுமையாக
பாதிக்கப் பட்டவர்கள் என்பது குறுபிடதக்கது.
இனி இந்த மருந்தின் செய்முறையை
பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்
அனைத்தும் எங்கும் எளிதாக கிடைக்கும்
பொருட்களே ஆகும்.
தேவையான மூலப்பொருட்கள்:
சோற்று கற்றாழை 400 கிராம், தேன் 500 கிராம்
விஸ்கி அல்லது பிராண்டி 50 மில்லி
(மருந்துக்கு மட்டும்)
செய்முறை:
கற்றாழையை நன்றாக கழுவிய தோலை
நீக்க வேண்டாம் பின்னர், பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி
வைத்துக் கொள்ளவும். கற்றாழையை சிறிது சிறிது துண்டுகளாக
நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி
தேன் மற்றும் விஸ்கி அல்லது
பிராண்டியுடன் சேர்த்து நன்றாக கலக்க விட
வேண்டும். இப்போது மருந்து தயாராகி
விட்டது.
மருந்து உண்ணும் விதம்:
இந்த கலவை கண்ணாடி பாட்டிலில்
அடைத்து வைத்தால் 1௦ நாட்கள் வரை
கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் தயரித்து
கொள்ளவும். உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு
முன்பு 15 ml வீதம் தினமும் மூன்று
வேளை அருந்தி வரவும். பயன்படுத்தும்
போதும் பாட்டிலை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை உட்கொள்ளக்
கூடாது.
நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள்
மாதம் ஒரு முறை மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய்
முற்றிலும் குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவும்.
இது எளிய மருந்து தான்
ஆனாலும் புற்றுநோய் குணமாவது இதன் சிறப்பு ஆகும்.
மருந்தை அதிக வெப்பம் இல்லாத
இடங்களிலோ அல்லது குளிர்சாதன பெட்டியிலோ
காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது
நல்ல பலன் தரும்.
நீங்களும் உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது
தேவை படலாம்! புகையிலை மற்றும்
புகைப்பிடிக்கும் அனைவரும், இந்த மருந்தை உட்கொள்ள
ஆரம்பித்தல் நல்லது.
ஒரு நிமிஷம், உங்களுக்கு புற்று நோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னா உங்க நிலைமையை நினைத்து பாருங்கள்…. உங்க பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் என எல்லோரும் அடையும் வேதனையும் அவர்கள் படப்போகும் துன்பத்தையும் நினைத்து பாருங்கள்.. உங்களை காத்துக் உங்கள் குடும்பத்தை வாழவையுங்கள்.